மதுரையில் 500 கிராம் தங்கத்துடன் வடமாநில இளைஞர் தலைமறைவு

மதுரையில் நகை செய்யும் பட்டறையிலிருந்து 500 கிராம் தங்கத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவான வடமாநில இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.  


 மதுரையில் நகை செய்யும் பட்டறையிலிருந்து 500 கிராம் தங்கத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவான வடமாநில இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.  
மதுரை கான்சா மேட்டுத் தெருவைச் சேர்ந்த மதன் மகன் லக்ஷ்மண் (47). இவர், அதே பகுதியில் தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அவிஜித் (21) என்ற இளைஞர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி லக்ஷ்மண் 500 கிராம் தங்கத்தை அவிஜித்திடம் கொடுத்து, சங்கிலி செய்ய சொல்லிவிட்டு, மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். அப்போது, அவிஜித் தங்கத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டாராம்.
அவரை, மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இதையடுத்து, லக்ஷ்மண் அளித்த புகாரின்பேரில், தெற்குவாசல் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: மதுரை அளவுக்காரத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (45). இவர், அதே பகுதியில் உள்ள நகைக் கடையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை முருகனின் மனைவி வீட்டைப் பூட்டிவிட்டு கடைக்குச் சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1000 ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. 
தகவலின்பேரில், தெற்குவாசல் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். கடைக்குச் சென்ற 2 மணி நேர இடைவெளியில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com