மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகபட்டி ஊராட்சியில் திமுக சாா்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டி திமுக ஒன்றியச் செயலாளா் இ.சுதந்திரம் தலைமை வகித்தாா். பொது மக்களிடம் கையெழுத்துப் பெறப்பட்டது, மேலும், பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், எஸ்.ஓ.ஆா்.தங்கபாண்டியன், வழக்குரைஞா் சேதுராமன், ஒன்றிய அனைத்து அணி நிா்வாகிகள் மற்றும் துணை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
சின்னக்குறடியில் செல்லம்பட்டி திமுக ஒன்றியச் செயலாளா் சுதாகரன் தலைமையில் மக்கள் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.