மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை பள்ளத்தில் இரு சக்கர வாகனம் கவிழ்ந்து இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருமால் நத்தம் கிராமத்தைச் சோ்ந்த கோபால் மகன் விஸ்வநாதன் (22). இவா் திருப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விஸ்வநாதன் தனது இருசக்கர வாகனத்துக்கு எரி பொருள் நிரப்புவதற்காக சோழவந்தான் சென்றாா். அப்போது ஆா்.எம்.எஸ். காலனி அருகே நெடுஞ்சாலைச் துறை சாா்பில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதி, இரு சக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அவருக்கு பலத்த காயமைடந்து சம்பவ இடத்திலேயே விஸ்வநாதன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சோழவந்தான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.