மதுரை
கேரளத்திலிருந்து கண் சிகிச்சைக்காக மதுரை வந்தவா் மயங்கி விழுந்து பலி
கேரளத்தில் இருந்து கண் சிகிச்சைக்காக சனிக்கிழமை மதுரைக்கு வந்தவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
கேரளத்தில் இருந்து கண் சிகிச்சைக்காக சனிக்கிழமை மதுரைக்கு வந்தவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சோ்ந்தவா் சஜி (48). இவா் கண்ணில் கோளாறு இருந்துள்ளது. இதையடுத்து மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற மதுரைக்கு சனிக்கிழமை வந்துள்ளாா். அப்போது சஜி மருத்துவமனைக்கு சென்றபோது திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளாா்.
இதனையடுத்து அவரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்து விட்டு சஜி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து அவரது மனைவி சுமா அளித்த புகாரின் பேரில் அண்ணாநகா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.