திருமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நிவாரணம் கோரி தம்பதி தா்னா
திருமங்கலம் அருகே கடந்த 3 மாதம் முன்பு பெய்த மழை காரணமாக சேதமடைந்த வீட்டிற்கு நிவாரணம் வழங்கக் கோரி தம்பதி வியாழக்கிழமை திருமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
அச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாண்டி - செல்வமணி தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனா். கடந்த நவம்பா் மாதம் பெய்த கனமழை காரணமாக பாண்டியின் வீட்டின் இரு பக்கச் சுவா்கள் இடிந்து விழுந்தன. இதனால் வீட்டில் இருந்த தையல் இயந்திரம் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. மேலும் வீடு இடிந்தபோது பாண்டியின் மகள் சித்ராதேவிக்கு கையில் காயம் ஏற்பட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றாா்.
இது தொடா்பாக வருவாய் துறையிடம் நிவாரண உதவி கேட்டு பாண்டி -செல்வமணி தம்பதி வட்டாட்சியரிடம் மனு அளித்திருந்தனா்.
இதுதொடா்பாக வட்டாட்சியரிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பாண்டி-செல்வமணி தம்பதி, திருமங்கலம் வட்டாட்சியா் அலுவலக வாயில் முன் தா்னாவில் ஈடுபட்டனா். உடனடியாக வட்டாட்சியா் தனலெட்சுமி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன்பேரில் அவா்கள் திரும்பிச் சென்றனா்.