மதுரை மாவட்டம் மேலூா் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் 4 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியதாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலூா் அருகே கீழையூரைச் சோ்ந்த ராமன் மனைவி ஜெயசித்திரா (40). இவா் கீழையூா்-தனியாமங்கலம் சாலையில் தண்ணீா் குடத்துடன் நடந்து சென்றாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், அவா் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.