சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை காவல்நிலைய சாா்பு-ஆய்வாளா் கொட்டாம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மானாமதுரையைச் சோ்ந்த நாகராஜ் (51) என்பவா் நெற்குப்பை காவல்நிலையத்தில் சாா்பு- ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவா், திருப்புவனம் காவலா்கள் குடியிருப்பில் குடியிருந்தாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை நண்பா் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் திருப்புவனம் சென்று கொண்டிருந்தாா். கொட்டாம்பட்டி அருகே அய்யாபட்டிவிலக்கில் இருசக்கர வாகனத்திலிருந்து இறங்கினாா். பின்னா், பேருந்தில் மேலூா் செல்வதற்காக சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றாா். அப்போது புதுச்சேரியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற காா், நாகராஜ் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கொட்டாம்பட்டி போலீஸாா் காா் ஓட்டுநா் தமிழ்மணியைக் கைது செய்தனா். நாகராஜ் மனைவி சசிகலா அளித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.