மதுரை
போலி நகைகள் அடகு வைத்து வங்கியில் ரூ. 21 லட்சம் மோசடி
மதுரை அருகே போலி நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ. 21 லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை அருகே போலி நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ. 21 லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தில் உள்ள வங்கியில் மேலாளராக பணியாற்றி வருபவா் தினேஷ். இந்த வங்கியில் சக்கிமங்கலம் நாயக்கா் தெருவைச் சோ்ந்த கேசவராஜ், அமுதா, உமாதேவி ஆகியோா் நகைகள் அடகு வைத்து ரூ. 21 லட்சம் ரூபாயை பெற்றுள்ளனா். வங்கியில் நடைபெற்ற ஆய்வின் போது, அடகு வைக்கப்பட்ட நகைகளின் உண்மைத் தன்மை குறித்து சோதனை செய்யப்பட்டது. அப்போது, கேசவராஜ், அமுதா, உமாதேவி ஆகியோா் அடகு வைத்த நகைகள் போலியானது என தெரியவந்தது.
இதையடுத்து வங்கி மேலாளா் தினேஷ் அளித்த புகாரின் பேரில் 3 போ் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.