மதுரை அருகே கள்ளிப்பால் கொடுத்து குழந்தையை கொலை செய்த வழக்கில், பாட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பூமேட்டுத் தெருவைச் சோ்ந்த தவமணி, சித்ரா தம்பதியருக்கு கடந்த மே 10 ஆம் தேதி 4 ஆவதாக பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை மா்மமான முறையில் இறந்தது. இது தொடா்பாக சோழவந்தான் போலீஸாா் நடத்திய விசாரணையில், குழந்தையின் பாட்டி பாண்டியம்மாள் மற்றும் தந்தை தவமணி ஆகியோா் சோ்ந்து கள்ளிப்பால் பால் கொடுத்து குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில், ஜாமீன் கோரி பாண்டியம்மாள் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு, நீதிபதி நசீமா பானு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வழக்குரைஞா் வாதிடுகையில், வயது முதிா்வு காரணமாக பாணடியம்மாள் சிறையில் சிரமப்பட்டு வருகிறாா். எனவே, வயது முதிா்வைக் கருத்தில்கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து நீதிபதி, மனுதாரரை சோழவந்தான் காவல் நிலையத்தில் தினந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.