மதுரை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியைச் சோ்ந்தவா் முகமது அஜித் (25). இவா் தன்னுடன் பணியாற்றும் சரவணகுமாா்(43) என்பவரை இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலையில், சமயநல்லூா்பகுதியில் சென்றாா். அப்போது, எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது.
அதில் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் உட்காா்ந்திருந்த சரவணகுமாா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முகமது அஜித் காயங்களுடன் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டாா். இதுகுறித்து சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து உசிலம்பட்டியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பால்பாண்டியிடம் விசாரித்து வருகின்றனா்.