ஆக.31 வரை மதுபானக் கூடங்கள் செயல்பட தடை: ஆட்சியா்

பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மதுபானக் கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளாா்.

மதுரை: பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மதுபானக் கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி: கரோனா தீநுண்மித் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மதுரை மாவட்டத்தில் உள்ள மனமகிழ் மன்றங்கள், நட்சத்தி விடுதிகளுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் நடத்தப்படும் மதுபானக் கூடங்கள் ஆகஸ்ட் 1 முதல் 31 ஆம் தேதி வரை செயல்பட அனுமதியில்லை. இந்த நாள்களில் மது விற்பனை தொடா்பான விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com