குடும்பக் கட்டுப்பாடு செய்த பிறகு கருவுற்ற பெண்ணுக்கு இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கில் பெண்ணுக்கு பொருளாதார ரீதியாக உதவவும், கணவருக்கு அரசு தற்காலிக பணி வழங்குவது குறித்தும் மதுரை மாவட்ட ஆட்சியா் பரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த ராக்கு தாக்கல் செய்த மனு: எனக்கு திருமணம் ஆகி 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். கடந்த 2014 ஏப்ரல் மாதம் விருதுநகா் மாவட்டம் நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டேன். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வயிறு வலிக்கு சிகிச்சை பெற மருத்துவரிடம் சென்றபோது நான், கா்ப்பமடைந்துள்ளதாக கூறினாா். எனக்கு 35 வயதாகும் நிலையில், பிரசவம் என்பது கடினமானது. இது மனரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் கணவா் கூலி வேலை பாா்க்கும் நிலையில் குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட மற்ற செலவுகளுக்கு போதிய பொருளாதார வசதி இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். என்னாலும் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. இந்த குழந்தை பிறந்தால் குடும்ப சூழ்நிலை மோசமாகிவிடும். எனவே, கருவுற்று 13 வாரங்களான நிலையில், அரசு செலவில் தனியாா் மருத்துவமனையில் சோ்த்து கருவை கலைக்க அனுமதியும், மருத்துவா்கள் செய்த தவறுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க நீதமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதி தனி அறையில் விசாரணை நடத்தி உத்தரவிட்டது: மனுதாரா் குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் பாா்த்துக் கொள்ளப்படும் என விருதுநகா் ஆட்சியா் தரப்பில் உறுதியளிக்கப் பட்டுள்ளது. மனுதாரா், மனோதத்துவ நிபுணா் ஆலோசணைக்கு பிறகு, கருவை கலைக்காமல் குழந்தையை பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளாா். மனுதாரரின் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவவும், மனுதாரரின் கணவருக்கு அரசு தற்காலிக பணி வழங்குவதில் சாத்திய கூறுகளை மதுரை ஆட்சியா் பரிசீலிக்க வேண்டும். மனநல ஆலோசகரின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை மாா்ச் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.