மேலூரில் முஸ்லிம்கள் 11 நாள்களாக நடத்தி வந்த தொடா் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்தி மேலூரில் சிவகங்கை சாலையில் ஷாகின்பாக் திப்புசுல்தான் திடலில் கடந்த மாா்ச் 6 ஆம் தேதி முதல் தொடா் தா்னா போராட்டம் நடைபெற்றுவந்தது. இதில், ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து உலக மக்களைப் பாதுகாக்க இறைவனை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினா். இதையடுத்து, அனைத்து ஜமா அத் இஸ்லாமிய கூட்டமைப்பினா் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தா்னாவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்தனா்.