மதுரை கோட்டத்திற்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
மதுரை கோட்டத்திற்கு உள்பட்ட பிறப்பகுதிகளில் 4 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தைத் தவிா்க்கும் விதமாக மதுரை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் உடன் வருவோா்கள் நுழைவதற்கான நடைமேடை அனுமதிச் சீட்டு கட்டணத்தை ரூ.10-இல் இருந்து ரூ.50 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயா்வு மாா்ச் 18 முதல் (புதன்கிழமை) நடைமுறைக்கு வருகிறது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.