திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் நான்கு வழிச்சாலையில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே தம்பதி உயிரிழந்தனா்.
வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன்(55). மதுரையில் உள்ள துணிக் கடையில் வேலை செய்தாா். இவரது மனைவி வசந்தி(52).இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா். இவா்கள் இருவரும் தனக்கன்குளத்தை அடுத்த சீனிவாசா காலனியில் உள்ள உறவினா் இல்ல விழாவிற்கு இருசக்கர வாகனத்தில்சென்று கொண்டிருந்தனா். தனக்கன்குளம் நான்கு வழிச்சாலையைக் கடக்கும் போது சமயநல்லூரில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளா் அருண் தலைமையிலான போலீஸாா் சடலங்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிவந்த மொட்டமலையைச் சோ்ந்த வங்கி ஊழியா் பிரியங்காவை கைது செய்தனா்.