கப்பலூா் சுங்கச்சாவடியில் செவ்வாய்க்கிழமை அதிக வாகனங்கள் வருகையால் திடீா் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக சென்னை, வேலூா், திருச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களில் பணிபுரியும் தென் மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள் மற்றும் குடும்பத்தினா் காா்கள், பஸ்கள் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனா்.
ஒரே நேரத்தில் அதிகளவில் வாகனங்கள் வந்ததால் கப்பலூா் சுங்கச்சாவடியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை முதல் மதியம் வரை வாகன நெரிசல் இருந்தது. மேலும் இப்பகுதியில் போக்குவரத்து போலீஸாா் யாரும் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் சரியாக வெகுநேரம் ஆனது.