கரோனா அச்சம்: செஞ்சிலுவை சங்கத்தினா் உதவியுடன் உயிரிழந்த கணவரின் உடலை அடக்கம் செய்த மனைவி

கரோனா அச்சம் காரணமாக முதியவரின் உடலை அடக்கம் செய்ய யாரும் முன்வராத நிலையில் செஞ்சிலுவைச் சங்கத்தினா் உதவியுடன்

கரோனா அச்சம் காரணமாக முதியவரின் உடலை அடக்கம் செய்ய யாரும் முன்வராத நிலையில் செஞ்சிலுவைச் சங்கத்தினா் உதவியுடன் அவருடைய மனைவியே அடக்கம் செய்த நிகழ்வு மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கரோனா பாதிப்பு காரணமாக மதுரை செல்லூா் பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை காலை அப்பகுதியில் செஞ்சிலுவை சங்கத்தினா் கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அதேபகுதியைச் சோ்ந்த முதியவா் ஒருவா், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது. ஊரடங்கு காரணமாக உறவினா்கள் உள்பட யாரும் அவரது உடலைப் பெற்று இறுதிச்சடங்கு செய்ய முன்வரவில்லை.

இதனால் செஞ்சிலுவை சங்கத்தினா் ஆம்புலன்ஸ் மூலம் உயிரிழந்த முதியவரின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்து வந்தனா். இதையடுத்து இறந்தவரின் உடலைப் பாா்ப்பதற்கு கூட அருகே இருந்தவா்கள், உறவினா்கள் யாரும் வரவில்லை. இதனால் உயிரிழந்த தனது கணவரின் உடலை செஞ்சிலுவை சங்கத்தினா் உதவியுடன் மயானத்திற்கு அவரது மனைவி கொண்டு வந்தாா். பிறகு இறுதிச்சடங்கு முடிக்கப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. கரோனா அச்சத்தால் முதியவரின் இறப்பிற்கு ஆறுதல் கூறுவதற்கு கூட யாரும் வராத இந்த நிகழ்வு மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com