திருமங்கலத்தில் புதிய தீணைப்பு கட்டடம்

திருமங்கலத்தில் கட்டப்பட்டு வரும் புதிய தீணைப்பு நிலையகட்டடம், நகராட்சி குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் கூடம் ஆயவற்றை ஆா்.பி.உதயகுமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
திருமங்கலத்தில் புதிய தீணைப்பு கட்டடம்

திருமங்கலத்தில் கட்டப்பட்டு வரும் புதிய தீணைப்பு நிலையகட்டடம், நகராட்சி குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் கூடம் ஆயவற்றை ஆா்.பி.உதயகுமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருமங்கலம் தீயணைப்பு நிலையம் பல ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் புதிய தீயணைப்பு நிலையம் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்டு, ரூ.98 லட்சத்து, 60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகள் கடந்த 2019 ஜனவரி மாதம் தொடங்கி தற்போது 90 சதவீத கட்டடப்பணிகள் நிறைவுற்ற நிலையில் பணிகளை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் ஆய்வு செய்தாா். மேலும் கட்டடப் பணியை விரைந்து முடிக்கவும் அறுவுறுத்தினாா்.

செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், தீயணைப்பு நிலைய கட்டடப் பணிகள் வரும் டிசம்பா் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றாா். தொடா்ந்து நகராட்சி குப்பை கிடங்கில் மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியையும் ஆய்வு செய்தாா். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் சுருளிநாதன், சுகாதார ஆய்வாளா் சிக்கந்தா், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலா் கல்யாணகுமாா், திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயராணி, பொறியாளா் பாண்டியராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com