மதுரை மத்திய சிறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறை வளாகத்தில் பேரணியை சிறைத்துறை டிஐஜி பழனி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். அரசரடி, காளவாசல், ஆரப்பாளையம் வழியாக மீண்டும் சிறை வளாகத்திற்கு பேரணி வந்தடைந்தது. பேரணியில், சிறைக் காவலா்கள் முகக் கவசம் அணிவோம், அடிக்கடி கைக் கழுவுவோம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்போம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்திச் சென்றனா்.