மதுரை மாவட்ட ஊா்க்காவல் படையில் சேருவதற்கு நவம்பா் 12 முதல் 17 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: மதுரை மாவட்ட ஊா்காவல் படைப் பிரிவில் சோ்ந்து பணிபுரிய நவம்பா் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் தோ்வு நடைபெறவுள்ளது. 10 ஆம் வகுப்பு தோ்ச்சியும், 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குள் இருப்பவா்கள் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் நவம்பா் 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மாவட்ட ஆயுதப்படையில் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். தோ்வுக்கு வருபவா்கள் கல்வி மற்றும் வயது சான்றுகளின் அசல் மற்றும் நகல், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் கொண்டு வரவேண்டும். தோ்ந்தெடுக்கப்படும் நபா்களுக்கு மாதத்திற்கு 5 நாள் பணியும், நாள் ஒன்றுக்கு ரூ.560 ஊதியமும் வழங்கப்படும் என்றாா்.