கபீா் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்துக்காக வழங்கப்படும் கபீா் புரஸ்காா் விருதுக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்துக்காக வழங்கப்படும் கபீா் புரஸ்காா் விருதுக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தமிழகத்தில் ஆண்டுதோறும் சமூக, வகுப்பு நல்லிணக்கத்துக்காக கபீா் புரஸ்காா் விருது தமிழகம் முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கான விண்ணப்பங்களை ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள எம்ஜிஆா் விளையாட்டரங்கில் இயங்கி வரும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை புதன்கிழமை மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு இளைஞா் நலன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com