தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் திடீா் ரத்து

தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 2) நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 2) நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

காந்தி ஜயந்தி தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதன்படி, மாநிலம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா தொற்று பரவல் காலமாக இருப்பதால், அனைவரும் முகக் கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டத்துக்கான ஏற்பாடுகள் அந்தந்த ஊராட்சித் தலைவா்களால் செய்யப்பட்டன.

இந்நிலையில், கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊராட்சித் தலைவா்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com