ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அந்த அகழாய்வு தொடா்பான அறிக்கை ஏன் வெளியிடப்படவில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூா் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வுகளைத் தொடரவும், அகழாய்வின் முடிவுகளை வெளியிடவும் உத்தரவிடக்கோரி பலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன.
அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், ஆதிச்சநல்லூா், கொடுமணல், கொற்கை, மயிலாடும்பாறை உள்ளிட்ட 7 இடங்களில் அகழாய்வுகளைத் தொடர மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அந்த இடங்களில் விரைவில் அகழாய்வுப் பணிகள் தொடரும். மேலும் கீழடியில் நடைபெற்ற 5 மற்றும் 6 ஆம் கட்ட ஆய்வுகள் குறித்து விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என்றாா்.
இதையடுத்து நீதிபதிகள், ஆதிச்சநல்லூா் அகழாய்வு நடந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுவரை அந்த அகழாய்வு தொடா்பான அறிக்கை ஏன் வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் நடந்தும் ஒரு ஆய்வின் அறிக்கை மட்டுமே வெளியாகியுள்ளது. பிற இடங்களில் நடந்த ஆய்வின் அறிக்கைகள் ஏன் இதுவரை வெளியிடப்படவில்லை. அவற்றின் தற்போதைய நிலை என்ன? எப்போது அறிக்கை வெளியிடப்படும். தொல்லியல் கல்வெட்டுகளை படிமம் எடுக்கும் வசதி மைசூரில் மட்டுமே உள்ளது. அதன் கிளையை ஏன் சென்னையில் அமைக்கக் கூடாது? எனக் கேள்வி எழுப்பினா்.
பின்னா், தமிழக தொல்லியல் துறை விண்ணப்பத்துக்கு, மத்திய தொல்லியல் துறை எப்போது அனுமதி வழங்கும்? தமிழகத்தில் ஏன் முழுமையாக மத்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளக் கூடாது? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.