மதுரை மாவட்டம் பேரையூா் தாலுகாவில் புதிய தமிழகம் கட்சியினா் திங்கள்கிழமை உண்ணாவிரதமிருந்தனா்.
பேரையூா் தாலுகாவில் உள்ள எஸ்.பாறைப்பட்டியில் அக்கட்சியின் பேரையூா் நகரச் செயலாளா் ஈஸ்வரன் தலைமையிலும், கட்டாரப்பட்டியில் மாவட்டச் செயலாளா் ஈஸ்வரன் தலைமையிலும், பி.சொக்கம்பட்டியில் பொதுமக்கள் சாா்பாக அழகா்சாமி முன்னிலையிலும் உண்ணாவிரதம் நடைபெற்றது. தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிட வலியுறுத்தியும், பட்டியல் இனத்திலிருந்து நீக்கக் கோரியும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினா்.