மதுரை அருகே போராட்டத்தின்போது மதுபானக் கடையை சேதப்படுத்திய 2 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.
மதுரை மாவட்டம் துவரிமானில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொது மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட 2 போ் மதுபானக் கடையை சேதப்படுத்தி உள்ளனா். இதுகுறித்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் கருப்பையா அளித்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து 2 பேரையும் தேடி வருகின்றனா். முன்னதாக, மதுபானக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 90 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.