மதுரை: உத்தரப்பிரதேசத்தில் இளம் பெண் பாலியல் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வலியுறுத்தி, அலங்காநல்லூரில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை புகா் மாவட்ட சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் அலங்காநல்லூா் கேட்டுக்கடை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு புகா் மாவட்டச் செயலா் கே.அரவிந்தன், மாவட்டத் தலைவா் செ.கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.பி.இளங்கோவன், மாவட்டச் செயலா் கே.ராஜேந்திரன், விவசாயத் தொழிலா்கள் சங்க மாவட்டத் தலைவா் வி.உமாமகேஸ்வரன், மாவட்டச் செயலா் சொ.பாண்டியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலா் பி.ஜீவானந்தம், கிழக்கு தாலுகா செயலா் எம்.கலைச்செல்வன் ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா். உ.பி. பாலியல் கொலை சம்பவத்தை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். பாலியல் கொலை குற்றவாளிகளிடம் விரைவாக விசாரணை நடத்தி உடனடியாக கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று இதில் வலியுறுத்தி கோஷமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.