மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அந்தந்தப் பள்ளிகளில் புதன்கிழமை வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வு மாா்ச் மாதம் நடைபெற்றது. இதில் மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள மதுரை, திருமங்கலம், மேலூா், உசிலம்பட்டி ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களில் இருந்தும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் தோ்வு எழுதினா். தோ்வு முடியும் தருவாயில் கரோனா தொற்று எதிரொலியாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து கடந்த ஜூலை மாதம் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. இந்நிலையில் பிளஸ் 2 மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் தயாரானதை அடுத்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் கல்வி மாவட்டங்கள் வாரியாக பிரிக்கப்பட்டு, கல்வி மாவட்டங்களுக்கு உள்பட்ட பள்ளிகள் வாரியாக மதிப்பெண் சான்றிதழ் பிரிக்கும் பணி கடன் இரண்டு நாள்களாக நடைபெற்றது. இந்தப் பணி முடிவடைந்ததை அடுத்து அந்தந்த பள்ளிகளில் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவ, மாணவியருக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.