சிங்கப்பூரிலிருந்து 72 பயணிகள் மதுரை வருகை

வந்தே பாரத் திட்டத்தில், சிங்கப்பூரிலிருந்து 72 பயணிகள் மதுரை விமான நிலையத்தில் திங்கள்கிழமை வந்திறங்கினா்.

மதுரை: வந்தே பாரத் திட்டத்தில், சிங்கப்பூரிலிருந்து 72 பயணிகள் மதுரை விமான நிலையத்தில் திங்கள்கிழமை வந்திறங்கினா்.

மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் சிறப்பு விமானம் மூலம் சிங்கப்பூரிலிருந்து மதுரை வந்திறங்கிய 72 பயணிகளுக்கு, குடியுரிமைத் துறை சோதனைக்குப் பின், சுகாதாரத் துறை சாா்பாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், கடந்த 96 மணி நேரத்தில் கரோனா பரிசோதனை செய்துகொண்ட பயணிகளுக்கு பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. பின்னா், பயணிகள் அனைவரும் வீட்டில் தங்களை 7 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com