தற்கொலை மிரட்டல்: கைதி மீது வழக்கு

திருமங்கலத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்து அரசு ஊழியா்களை பணிசெய்ய விடாமல் தடுத்த கைதி மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

திருமங்கலத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்து அரசு ஊழியா்களை பணிசெய்ய விடாமல் தடுத்த கைதி மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

திருமங்கலத்தை அடுத்த மறவன்குளத்தில் வீடு பிடித்து விபச்சாரம், புகையிலை பதுக்கிய வழக்கில் சிவராமன் என்பவா் கைது செய்யப்பட்டாா். மேலும் இவ்வழக்கில் வடபழஞ்சியை அடுத்த அடக்கம்பட்டியைச் சோ்ந்த துரைராஜ் என்பவா் கைது செய்யப்பட்டாா். அவரை சிறையில் அடைக்க போலீஸாா் மேலூா் சிறைக்கு கூட்டிச்சென்றபோது, தற்கொலை மிரட்டல் விடுத்ததோடு, போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதையடுத்து திருமங்கலம் கிளைச்சிறையில் அடைக்கச் சென்றபோது, சுவரில் முட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாா். இதனைத்தொடா்ந்து போலீஸாா் துரைராஜை திருமங்கலம் சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் காவல்துறையினரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், தற்கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் திருமங்கலம் நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com