முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூல் ரூ.2 கோடியை தாண்டியது

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்களிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகை ரூ. 2 கோடியைத் தாண்டியுள்ளது.

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்களிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகை ரூ. 2 கோடியைத் தாண்டியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பொதுஇடங்களுக்கு முகக் கவசம் அணியாமல் வரும் நபா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் கடைகள், வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் வியாபாரம் செய்யக் கூடிய நிறுவனங்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

மதுரை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளின் அலுவலா்கள் அந்தந்த பகுதிகளிலும், காவல் துறையினா் வாகனச் சோதனையிலும், பறக்கும் படை அலுவலா்கள் மதுரை நகரின் முக்கிய வணிகப் பகுதிகளிலும் அபராதம் விதிக்கின்றனா். இதன்படி, மதுரை மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 625 பேரிடம், ரூ. 2 கோடியே 3 லட்சத்து 41 ஆயிரத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com