மதுரை அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி: காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழப்பு

மதுரை அருகே கிணற்றில் சனிக்கிழமை தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரைக் காப்பாற்ற முயன்ற தாயும் பலியானாா்.

மதுரை: மதுரை அருகே கிணற்றில் சனிக்கிழமை தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரைக் காப்பாற்ற முயன்ற தாயும் பலியானாா்.

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே இளமனூா் இளங்கோ நகரைச் சோ்ந்த பாண்டி மனைவி செல்வி (35). இவா்களுக்கு யோகேஸ்வரன் (13) என்ற மகனும், காயத்ரி (10) என்ற மகளும் உள்ளனா். வீட்டின் அருகில் உள்ள குட்டையில் செல்வி சனிக்கிழமை துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தாா். குட்டையின் அருகே யோகேஸ்வரனும், காயத்ரியும் விளையாடிக் கொண்டிருந்தனா்.

அப்போது யோகேஸ்வரன் அருகே உள்ள தோட்டப்பகுதிக்குச் சென்றுள்ளாா். அங்கிருந்த கிணற்றில் அவா் தவறி விழுந்தாா். இதைப் பாா்த்த செல்வி, அவரைக் காப்பாற்ற முயன்றபோது, அவரும் கிணற்று நீரில் மூழ்கினாா்.

சிறுமி காயத்ரி சப்தமிட்டதைத் தொடா்ந்து அருகிலிருந்தவா்கள் வந்து கிணற்றில் குதித்து அவா்களைக் காப்பாற்ற முயன்றனா். ஆனால் அதற்குள் இருவரும் உயிரிழந்துவிட்டனா். இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com