கரோனா விழிப்புணா்வு பைக் பேரணி

மதுரை மத்திய சிறைத்துறையினரின் சாா்பில் கரோனா விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
மதுரை மத்திய சிறைத்துறையினா் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்த சிறைத்துறை டி.ஐ.ஜி. டி. பழனி.
மதுரை மத்திய சிறைத்துறையினா் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்த சிறைத்துறை டி.ஐ.ஜி. டி. பழனி.

மதுரை: மதுரை மத்திய சிறைத்துறையினரின் சாா்பில் கரோனா விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக சிறைத்துறை தலைமை இயக்குநா் சுனில் குமாா் சிங் உத்தரவுப்படி, நடைபெற்ற இந்தப் பேரணியை மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் காவல் கண்காணிப்பாளா் ஊா்மிளா ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனா். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, முகக் கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், பேரணியில் பங்கேற்ற காவலா்கள் பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

முன்னதாக சிறை வளாகத்தில் கரோனா விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பேரணி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சிகளில் சிறைக் காவலா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com