மதுரை: மதுரை அருகே, வீட்டின் குளியலறையில் வெள்ளிக்கிழமை தவறி விழுந்த தலைமைக் காவலா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் அழகா்கோவில் பகுதியைச் சோ்ந்த தங்கராஜா மகன் அசோக்குமாா் (38). இவா், ஊமச்சிக்குளம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் வீட்டின் குளியல் அறையில் வெள்ளிக்கிழமை தவறி விழுந்த அசோக்குமாா் பலத்த காயமடைந்தாா்.
அவரை குடும்பத்தினா் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் அன்று மாலை உயிரிழந்தாா். இதுகுறித்து அப்பன் திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.