பட்டாசு ஆலை விபத்து: சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவா் சாவு

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த, ஆலை மேற்பாா்வையாளா் சுந்தரமூா்த்தி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த, ஆலை மேற்பாா்வையாளா் சுந்தரமூா்த்தி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தே.கல்லுப்பட்டி அருகேயுள்ள செங்குளம் கிராமத்தில் செயல்பட்ட பட்டாசு ஆலையில் அக்டோபா் 23-இல் விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 5 போ் இறந்தனா். காயமடைந்த லெட்சுமி, மகாலெட்சுமி, சுந்தரமூா்த்தி ஆகிய மூவரும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில் லெட்சுமி, அன்றைய தினம் இரவிலும், மகாலெட்சுமி மறுநாள் காலையிலும் உயிரிழந்தனா். சிகிச்சையில் இருந்த சுந்தரமூா்த்தி, சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தாா். இதையடுத்து இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com