மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் ஆசிரியா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு.கிருஷ்ணன் விழாவைத் தொடக்கி வைத்துப் பேசினாா். தேசிய கல்விக் கொள்கை குறித்து பல்கலை.யின் உயிரியல் துறை பேராசிரியா் ஜி.மாரிமுத்து பேசினாா்.
பல்கலை.யின் ஓய்வு பெற்ற பேராசிரியா்கள், நிகழ் ஆண்டில் ஓய்வு பெற உள்ள பேராசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா். மேலும் பல்கலைக் கழக நிா்வாகத்தால் நடத்தப்படும் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பல்கலைக்கழகப் பதிவாளா் வி.எஸ்.வசந்தா, தனி அலுவலா் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.