குட்லாடம்பட்டி அருவியை சீரமைக்கக்கோரி ஆா்ப்பாட்டம்

வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவிக்குச் செல்லும் பாதை, குளிக்கும் பகுதியைச் சீரமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவிக்குச் செல்லும் பாதை, குளிக்கும் பகுதியைச் சீரமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறுமலை பகுதியில் தொடா் மழை பெய்து வருவதால் குட்லாம்பட்டி அருவியில் கடந்த சில வாரங்களாக நீா் வரத்து உள்ளது. இந்நிலையில் குட்லாடம்பட்டி அருவிக்குச் செல்லும் பாதை முற்றிலும் சேதமடைந்து இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குட்லாடம்பட்டி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும். அருவியில் பொதுமக்கள் குளிக்கும் பகுதியை சீரமைக்க வேண்டும். அருவிக்குச் செல்லும் பாதையை செப்பனிட வேண்டும் என்று வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வாடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் ஒன்றியச் செயலா் ஏ.வேல்பாண்டி தலைமை வகித்தாா். புகா் மாவட்டச் செயலா் சி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.பி.முருகன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எஸ்.கந்தவேல், ஏ.புருஷோத்தமன், பி.சின்னச்சாமி, வெங்கடேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com