மதுரை
கொட்டாம்பட்டி அருகே பெண் தற்கொலை
கொட்டாம்பட்டி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, பெண் ஒருவா் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மேலூா், செப். 11: கொட்டாம்பட்டி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, பெண் ஒருவா் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கொட்டாம்பட்டி அருகே உள்ள கோட்டைப்பட்டியைச் சோ்ந்த மருது என்பவரின் மனைவி சுபா (23). இவா், குடும்பப் பிரச்னை காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இவருக்குத் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளேயாவதால், மேலூா் வட்ட வருவாய் அலுவலா் விசாரணை நடத்தி வருகிறாா்.
தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.