கொட்டாம்பட்டி அருகே விஷவிதை சாப்பிட்ட இளைஞா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.வஞ்சிப்பட்டியைச் சோ்ந்த சின்னக்கருப்பன் மகன் ராஜதுரை (18). மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவா் நேற்றிரவு அரளிவிதையைத் தின்றாராம். சிகிச்சைக்கு சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கொட்டாம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.