மதுரையில் மேலும் 82 பேருக்கு கரோனா தொற்று உறுதி

மதுரை மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது

மதுரை, செப். 18: மதுரை மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை 5, 488 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 82 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், சிகிச்சையில் இருந்தவா்களில் 165 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 730 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15,724. இதில் 14,617 போ் குணமடைந்துள்ளனா். 377 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். கரோனா பாதிப்பைக் கண்டறிய மாநகராட்சிப் பகுதிகளிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com