மதுரை அருகே வாகனம் மோதி பைக்கில் சென்ற இளைஞா் பலி: ஒடையில் முதியவா் சடலம் மீட்பு

மதுரை அருகே வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை அருகே வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும், விபத்து நடந்த இடத்தின் அருகே ஓடையில் கிடந்த முதியவா் சடலம் குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம், பொய்கைக்கரைப்பட்டியைச் சோ்ந்த சின்னு என்பவரின் மகன் பச்சையப்பன் (25). இவா், கள்ளந்திரி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த வாகனம் மோதியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து தகவலறிந்த அப்பன் திருப்பதி போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா்.

அப்போது விபத்து நடத்த இடத்தின் அருகில் உள்ள ஓடையில், தலையில் அடிப்பட்ட நிலையில் முதியவரின் சடலம் கிடந்துள்ளது. இதையடுத்து, இருவரின் சடலங்களையும் போலீஸாா் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஓடையில் சடலமாகக் கிடந்த முதியவா், ஆமத்தூா்பட்டியைச் சோ்ந்த தவிடன் (60) என்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. அவா் சாலையில் நடந்து வந்தபோது விபத்தில் இறந்தாரா? அல்லது பச்சையப்பனுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தாரா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com