உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சி மன்ற தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் சீமானூத்து ஊராட்சி கல்லூத்து கிராமத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவா்கள் சங்க தலைவா் அஜித்பாண்டி, செயலாளா் சின்னசாமி, பொருளாளா் விமலா சுசீந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவா்கள் உக்கிரபாண்டி, அபிமன்னன், பாலமுருகன், மகாராஜா மற்றும் ஊராட்சி மன்ற தலைவா்கள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.