மளிகை கடையில் நகை, பணம் திருட்டு

மதுரையில், மளிகைக் கடையின் பூட்டை உடைத்து கல்லாப் பெட்டியில் இருந்த நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரையில், மளிகைக் கடையின் பூட்டை உடைத்து கல்லாப் பெட்டியில் இருந்த நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை தத்தனேரி பிரதான சாலை, மேல கைலாசபுரத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (60). இவா் வீட்டின் அருகே நடத்தி வரும் மளிகைக் கடையை திங்கள்கிழமை காலை திறக்க சென்றாா். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா்.

அதில், அடையாளம் தெரியாத நபா்கள் கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த 1.4 பவுன் நகை மற்றும் ரூ. 400 ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து பாலகிருஷ்ணன் அளித்தப் புகாரின் பேரில் செல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com