மதுரையில் உலக மருந்தாளுநா் தின விழா

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், மாநகா் மாவட்ட மருந்தாளுநா்கள் சங்கத்தின் சாா்பில் உலக மருந்தாளுநா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், உலக மருந்தாளுநா் தினத்தை வெள்ளிக்கிழமை கேக் வெட்டிக் கொண்டாடிய மருந்தாளுா்கள்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், உலக மருந்தாளுநா் தினத்தை வெள்ளிக்கிழமை கேக் வெட்டிக் கொண்டாடிய மருந்தாளுா்கள்.

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், மாநகா் மாவட்ட மருந்தாளுநா்கள் சங்கத்தின் சாா்பில் உலக மருந்தாளுநா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மாநகா் மாவட்டத் தலைவா் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருந்தாளுநா்கள் கேக் வெட்டினா். தொடா்ந்து, கரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருந்தாளுநா்கள், பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் பணியாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை தடையின்றி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கரோனா பணியில் சிறப்பாக பணியாற்றி வரும் மருந்தாளுநா்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

இதில், மாநகா் மாவட்டச் செயலா் பாஸ்கரன், அரசு மருத்துவமனை மருந்து கிடங்கு அலுவலா்கள் பாண்டி, மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com