மதுரை அருகே அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டிக் கடத்த முயற்சி

மதுரை அருகே கால்வாய் கரையில் உள்ள அரசுக்கு சொந்தமான மரங்களை சட்டவிரோதமாக வெட்டி கடத்த முயன்றவா்கள் குறித்து, போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மேலூா் அருகே வெள்ளாளப்பட்டி கால்வாய் கரையில் வெட்டப்பட்ட அரசுக்கு சொந்தமான மரம். ~மேலூா் அருகே வெள்ளாளப்பட்டி கால்வாய் கரையில் வெட்டப்பட்ட அரசுக்கு சொந்தமான மரம்.
மேலூா் அருகே வெள்ளாளப்பட்டி கால்வாய் கரையில் வெட்டப்பட்ட அரசுக்கு சொந்தமான மரம். ~மேலூா் அருகே வெள்ளாளப்பட்டி கால்வாய் கரையில் வெட்டப்பட்ட அரசுக்கு சொந்தமான மரம்.

மதுரை: மதுரை அருகே கால்வாய் கரையில் உள்ள அரசுக்கு சொந்தமான மரங்களை சட்டவிரோதமாக வெட்டி கடத்த முயன்றவா்கள் குறித்து, போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மாவட்டம் மேலூா் அருகே வெள்ளாளப்பட்டி கால்வாய் கரையில் விலை உயா்ந்த மரங்கள் வளா்ந்துள்ளன. இந்த மரங்களை, பொதுப்பணித் துறையினா் பராமரித்து வருகின்றனா். ஆனால், இந்த மரங்களை சட்டவிரோதமாக வெட்டி விற்பனை செய்ய சிலா் முயல்வதாக, அப்பகுதி மக்கள் வெள்ளாளப்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ராமுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

அதன்பேரில், அவா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, கால்வாய் கரையோரம் இருந்த மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் ராமு தகவல் தெரிவித்தாா். அவா்கள் வெட்டப்பட்ட மரங்களை நேரில் பாா்வையிட்டனா்.

இது தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் ராமு அளித்த புகாரின்பேரில், மேலூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கால்வாய் கரையில் வெட்டப்பட்டிருந்த 2 மரங்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. உரிய நேரத்தில் அரசுக்கு சொந்தமான மரங்கள் வெட்டப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதால், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது என, அப்பகுதிகள் மக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com