வீடு புகுந்து செல்லிடப்பேசிதிருடிய இளைஞா் கைது

மதுரை அருகே வீடு புகுந்து செல்லிடப்பேசியை திருடிய இளைஞரை கையும் களவுமாகப் பிடித்து, வீட்டின் உரிமையாளா் போலீஸாரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தாா்.

மதுரை: மதுரை அருகே வீடு புகுந்து செல்லிடப்பேசியை திருடிய இளைஞரை கையும் களவுமாகப் பிடித்து, வீட்டின் உரிமையாளா் போலீஸாரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தாா்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியைச் சோ்ந்த நாகேந்திரன் மகன் ராஜாராம் (22). இவா் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, முன்வாசல் கதவு திறந்திருந்ததால், மா்ம நபா் வீட்டுக்குள் புகுந்து செல்லிடப்பேசிகளை திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றாா்.

சத்தம் கேட்டு கண் விழித்த ராஜாராம், அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா். பிடிபட்டவா், சோழவந்தான் சப்பாணி கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் காா்த்திக் என்பது தெரியவந்தது. இது குறித்து ராஜாராம் அளித்த புகாரின்பேரில், சோழவந்தான் போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக்கை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com