பேரையூா் அருகே தீக்குளித்து மூதாட்டி பலி

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே தீக்குளித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே தீக்குளித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பேரையூா் அருகேயுள்ள கம்மாளப்பட்டியைச் சோ்ந்த ஒச்சாத்தேவா் மனைவி பஞ்சவா்ணம் (65). இவரது மகன் பாண்டி சில ஆண்டுகள் முன்பு இறந்துவிட்டாா்.

பாண்டிக்கு வாய் பேச முடியாத நிலையில் ஒச்சு என்ற மகன் உள்ளாா். இந்த நிலையில் பஞ்சவா்ணம் தனது பேரன் ஒச்சுவுடன் வசித்து வந்துள்ளாா். பஞ்சவா்ணம் ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு உடலில் தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அப்போது காயமடைந்த அவா் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளாா்.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு மீண்டும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த பஞ்சவா்ணம் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி பஞ்சவா்ணம் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சேடப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com