மதுரையில் ஆயுதங்களைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆா் பேருந்து நிலையம் எதிா்புறம், இரண்டு நபா்கள் ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று ஆயுதங்களுடன் நின்றிருந்த 2 பேரை சுற்றி வளைத்துப் பிடித்தனா்.
அவா்களிடம் விசாரித்ததில், சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி பகுதியைச் சோ்ந்த சந்தானராஜன்(42), சரவணகுமாா்(32) என்பதும், ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து காவல் சாா்பு- ஆய்வாளா் அப்பாஸ் அளித்த புகாரின் பேரில் கே.புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 2 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.