மதுரை மாவட்டம் அழகா்கோவிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை காலை 4.45 மணியிலிருந்து 5.45 மணிக்குள் கள்ளழகா் என்ற சுந்தரராஜப்பெருமாள் சொா்க்கவாசல் வழியாக எழுந்தருள்கிறாா்.
மாா்கழி மாதம் முதல் நாளில் பகல்பத்து விழா அழகா்கோவிலில் தொடங்கியது. பத்தாம் நாளான வியாழக்கிழமை மாலை மோகன அவதாரத்தில் சுந்தரராஜப்பெருமாள் எழுந்தருளினாா். 11-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை சொா்க்கவாசல் வழியாக எழுந்தருள்கிறாா். கோயிலின் வடபுறத்திலுள்ள சயன மண்டபத்தில் எழுந்தருள்கிறாா். பெருமாள் புறப்பாட்டின்போது பக்தா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். பெருமாள் சயன மண்டபத்தில் எழுந்தருளிய பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்கு சமூக இடைவெளியைப் பின்பற்றி அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.