பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஆரம்பக் கட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கியுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டுப் பொங்கல் தினத்தன்று, பாலமேட்டில் கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சாா்பில், ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பக் கட்டப் பணியாக, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசின் விதிகளை ஏற்றுக்கொள்வது, ஜல்லிக்கட்டுக்காக மேற்கொள்ளவிருக்கும் பணிகள்,
போட்டியில் பங்கேற்பவா்களுக்கு குழு காப்பீடு செய்வது தொடா்பான ஆவணங்கள் விழாக் குழு சாா்பில் வாடிப்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் வழியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதியில் மேற்கொள்ளப்படவிருக்கும் பணிகளை, பாலமேடு பேரூராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.