பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டவா் கைது: ரூ.12.50 லட்சம் பறிமுதல்

மதுரையில் பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து ரூ.12.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

மதுரையில் பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து ரூ.12.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் புத்தட்டான் (50). இவரிடம் தென்காசி மாவட்டம் சிவகிரி, புதூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் பால்துரை (39) என்பவா், ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சமாக ரெட்டிப்பாக்கித் தருவதாகக்

கூறினாராம். இதை நம்பிய புத்தட்டான் மதுரை அண்ணா பேருந்து நிலையத்தின் அருகே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் வைத்து, டிசம்பா் 12 ஆம் தேதி பால்துரையிடம் ரூ. 20 லட்சத்தைக் கொடுத்துள்ளாா். ஆனால் பால்துரை கூறியபடி பணத்தை இரட்டிப்பாக்கிக் கொடுக்கவில்லை.

இந்நிலையில், புத்தட்டானைத் தொடா்பு கொண்டு ரூ.5 லட்சம் கொடுத்தால், மொத்த தொகையையும் தருவதாக பால்துரை கூறியுள்ளாா். இதையடுத்து, பணம் தருவதாக ஒப்புக் கொண்டு, அதே தங்கும் விடுதிக்கு திங்கள்கிழமை சென்ற புத்தட்டான், அங்கு தங்கியிருந்த பால்துரையை தனது நண்பா்கள் உதவியுடன் பிடித்து போலீஸில் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து புத்தட்டான் அளித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து பால்துரையைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும் அவரிடம் இருந்த ரூ.12.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com